மெட்ரோ ரயிலில் இனி இந்த வசதி இல்லாமல் போகலாம்.. 
தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் இனி இந்த வசதி இல்லாமல் போகலாம்.. 

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் தங்களது சைக்கிளை ரயிலில் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN


சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் தங்களது சைக்கிளை ரயிலில் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது முதல், பயணிகள் தங்களது சிறிய அல்லது மடக்கும் வகையிலான சைக்கிள்களை ரயிலில் கொண்டு செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

மெட்ரோ ரயிலின் சிறப்பு வகுப்புப் பெட்டியில் பயணிக்கும் பயணிகள் மட்டும், தங்களது சைக்கிளை ரயிலில் எடுத்துச் செல்ல வசதி கொடுக்கப்பட்டது. அதிலும், அந்தப் பெட்டியில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால்தான். ஆனால், தற்போது அந்தப் பெட்டிகள் மகளிர் மட்டும் பெட்டிகளாக மாற்றப்பட்டதாலும், மெட்ரோ ரயிலில் பயணிகளின் கூட்டம் அதிகரித்திருப்பதாலும் இந்த சேவையை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, நாள் ஒன்றுக்கு மெட்ரோ ரயிலில் 2.2 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். கடந்த ஏப்ரலில் மட்டும் 67 லட்சம் பேர் பயணித்திருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT