முகப்பு
தமிழ்நாடு

அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:57 PM
முதல்வா் மு.க.ஸ்டாலின்
பகிர்:

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி திமுகவை சேர்ந்தவர்களின் சொத்துப் பட்டியலை ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தரப்பில், அரசு வழக்கறிஞர் தேவராஜன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்தார்.

அதில், சொத்துப் பட்டியல் என்ற பெயரில் எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி அவதூறு தகவல்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை 8 வாரத்திற்கு ஒத்திவைப்பதாக சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →