முகப்பு
தமிழ்நாடு

மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்: பெரம்பலூர் முதலிடம்!

தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 11:56 AM
பகிர்:

தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதங்களைக் காணலாம்.
10ஆம் வகுப்பு முடிவுகளில் அதிக அளவு தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 

9.2 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய தேர்வில் 91.39 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  

மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவீதம் தேர்ச்சி. மாணவிகள் 94.66 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

தமிழ்நாட்டில், 3,718 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகள் 87.45% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 92.24%, தனியார் பள்ளிகளில் 97.38% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்

பெரம்பலூர் 97.67%
சிவகங்கை 97.53%
விருதுநகர் 96.22%
கன்னியாகுமரி 95.99%
தூத்துக்குடி 95.58%
அரியலூர் 95.4%
ஈரோடு 95.57%
திருச்சி 94.82%
நெல்லை 94.19%
தென்காசி 94.12%
காஞ்சிபுரம் 90.28%
சேலம் 91.13%

முழு விபரங்களுக்கு.. இங்கே கிளிக் செய்யவும்

முழு கட்டுரையைப் படிக்க →