தமிழகத்தில் டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் தாராபுரம் டிஎஸ்பி தனராசு நாமக்கல் மாவட்ட துணை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணனை பழனி டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி டிஎஸ்பி பிரபு ராணிப்பேட்டை டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மன் திருச்செங்கோடு டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
திருச்செங்கோடு டிஎஸ்பி மகாலட்சுமி தருமபுரி பென்னாகரம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். பரமத்திவேலூர் டிஎஸ்பி கலையரசன் மாற்றப்பட்டு புதிய டிஎஸ்பியாக ராஜாமுரளி நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.