முகப்பு
தமிழ்நாடு

மது ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களிலும் வருமானவரித் துறை சோதனை

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் மது ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:59 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் மது ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது தம்பி அசோக் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் அமைச்சராக இருந்தபோது வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு தற்போது இந்த  வழக்கு உச்சநீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து கரூரில் ராமேஸ்வரப் பட்டியில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீடு, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வீடுகளில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதுபோல டாஸ்மாக் ஒப்பந்ததார்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 

சென்னை, கோவை, கரூர் என தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →