முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 3) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 3) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இம்மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ. 3) அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சனிக்கிழமை (நவ. 4) தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி- மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு (மில்லி மீட்டரில்): ராமநதி அணைப் பகுதி (தென்காசி) 90, காரைக்கால், ராமநாதபுரம் தலா 80, மாஞ்சோலை (திருநெல்வேலி), அருப்புக்கோட்டை (விருதுநகா்), திருச்செந்தூா் (தூத்துக்குடி), ராமநாதபுரம் தலா 70, வத்திராயிருப்பு (விருதுநகா்), கோவை, செங்கோட்டை (தென்காசி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), தொண்டாமுத்தூா் (கோவை), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), பெரியாறு அணை (விருதுநகா்), தலா 60.

முழு கட்டுரையைப் படிக்க →