மின் பாதிப்புகளை சரி செய்ய ரூ.4.4 கோடி ஒதுக்கீடு!
தமிழ்நாட்டின் மின் விநியோக பாதிப்புகளை சரி செய்ய ரூ.4.4 கோடி ஒதுக்கீடு செய்து நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மின் விநியோக பாதிப்புகளை சரி செய்ய ரூ.4.4 கோடி ஒதுக்கீடு செய்து நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.
மிக கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு அபாயம் ஏற்படுகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஏற்படும் மின் விநியோக பாதிப்புகளை சரி செய்ய ரூ.4.4 கோடி ரூபாயை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒதுக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கும் ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர்,
மின்விநியோக பாதிப்பு தொடர்பான புகார்களை 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பருவமழை பெய்து வரும் நிலையில், மின்சாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.