மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல்!
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை (நவ. 18) காலை அவைத்தலைவர் அப்பாவு உரையுடன் தொடங்கியது.
மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை (நவ. 18) காலை அவைத்தலைவர் அப்பாவு உரையுடன் தொடங்கியது.
முதலில், மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் வேணு, வெங்கடசாமி, வேல்துரை ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
இதேபோன்று என். சங்கரய்யா, பங்காரு அடிகளார் ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.