தமிழ்நாடு

தமிழக எல்லைக்குள் நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் கைது!

தமிழக கடலோர எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேரை கடலோர காவல் படையினர் இன்று (நவ. 21) கைது செய்தனர். 

DIN

தமிழக கடலோர எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேரை கடலோர காவல் படையினர் இன்று (நவ. 21) கைது செய்தனர். 

இந்திய கடல் பகுதிக்குள் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, ராமேஸ்வரம் அருகேவுள்ள தனுஷ்கோடியில் இந்திய எல்லைக்குள் இலங்கை படகு ஒன்று அத்துமீறி இன்று (நவ. 21) நுழைந்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற காவல் துறையினர், அந்தப் படகை சுற்றுவளைத்து முற்றுகையிட்டனர். மேலும், படகில் இருந்த 5 மீனவர்களையும் காவல் படையினர் கைது செய்தனர்.

எல்லைத் தாண்டி மீன் பிடிக்க வந்தார்களா? அல்லது கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT