தமிழ்நாடு

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

DIN


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு கொட்டி தீர்த்த கனமழையால் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரம் விழுந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவந்த நிலையில் புதன்கிழமை இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்தது. இதில், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13 -ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலைகளில் விழுந்துகிடப்பதால் வியாழக்கிழமை அதிகாலை முதலே போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

13 -ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலைகளில் விழுந்துகிடப்பதால் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் குன்னூர் மேட்டுபாளையம் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்க்கின்றது. நான்கு மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையனோடையில் தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்பபு

சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்

கயத்தாறில் கிணற்றில் கிடந்த ஆண் சடலம் மீட்பு

குமரி மாவட்டத்தில் ஜூன் 8இல் மக்கள் நீதிமன்றம்

ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

SCROLL FOR NEXT