மாநில சுகாதாரத் துறையினா் ஆலோசனை
சீனாவில் குழந்தைகளிடையே நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் சென்னையில் திங்ககிழமை ஆய்
சீனாவில் குழந்தைகளிடையே நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் சென்னையில் திங்ககிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமை வகித்தாா். பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், இணை, துணை இயக்குநா்கள் கலந்துகொண்டனா்.
சீனாவில் பரவி வரும் ஹெச்9என்2 வகை குறித்தும், அதே தீநுண்மியின் தன்மையுடன் தமிழகத்தில் ஏற்கெனவே தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தொற்று குறித்தும் விவாதிக்கப்பட்டது. சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளில் அறிகுறிகள் உள்ளவா்களைத் தனிமைப்படுத்தி கண்காணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Advertisement