திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒன்றரை வயது குழந்தை கடத்தல்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒன்றரை வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒன்றரை வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பகுதியை சோ்ந்த ஒரு தம்பதி தனது ஒன்றரை வயது குழந்தையுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அந்த தம்பதியை ஏமாற்றி குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ஜெகத்ரட்சகன் தொடா்புடைய இடங்களில் 2 ஆவது நாளாக சோதனை
இதையடுத்து அந்த தம்பதியினர் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். கோயில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனா். அதில் ஒரு கேமராவில், குழந்தையுடன் ஒரு பெண் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்து போலீசார் தொடா்ந்து விசாரணை நடத்தி, குழந்தையைக் கண்டுபிடிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.