தமிழ்நாடு

கொடைக்கானலில் அக்.8ம் தேதி சுற்றுலா தலங்களுக்கான நுழைவுக் கட்டணம் ரத்து

கொடைக்கானலில் அக். 8 ஆம் தேதி மட்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கான நுழைவுக் கட்டணம் ரத்து செய்து வனத்துறை அறிவித்துள்ளது. 

DIN


திண்டுக்கல்: கொடைக்கானலில் அக். 8 ஆம் தேதி மட்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கான நுழைவுக் கட்டணம் ரத்து செய்து வனத்துறை அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை வன உயிரின பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அக். 8 ஆம் தேதி மட்டும்  சுற்றுலா தலங்களுக்கான நுழைவு கட்டணத்தை ரத்து செய்து வனத்துறை அறிவித்துள்ளது. 

அதன்படி, கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மர சோலை, தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஒருநாள் மட்டும் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

SCROLL FOR NEXT