தமிழ்நாடு

லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு!

DIN

கம்பம்: தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி  நிலையத்தில் திங்கள்கிழமை மின்சார உற்பத்தி 117 மெகாவாட்டாக அதிகரித்து உற்பத்தி செய்யப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு ஞாயிற்றுக்கிழமை 1000 கன அடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை 1,300 கன அடியாக வெளியேற்றப்பட்டது. அதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 90 மெகாவாட்டாக உற்பத்தியானது, திங்கள்கிழமை 117 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்படுகிறது.

அணை நிலவரம்
திங்கள்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.80 அடி உயரமாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 3,182 .40 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 1,401.39 கன அடியும், தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,300 கன அடியும் வெளியேற்றப்பட்டது. நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 17.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 2.4 மி.மீ., மழையும் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT