வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பிடிபட்ட மஞ்சள் சாரை பாம்பு. 
தமிழ்நாடு

அரசுப் பள்ளிக்கு படையெடுத்த பாம்புகளால் பரபரப்பு!

வாழப்பாடி அருகே அரசு பள்ளிக்கு படையெடுத்த பாம்புகளால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

வாழப்பாடி அருகே அரசு பள்ளிக்கு படையெடுத்த பாம்புகளால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிபாடுகள் ‌அகற்றப்படாததால்,  அப்பகுதியில் பாம்புகள் புகுந்துள்ளன. 

நேற்று திங்கள்கிழமை ‌பள்ளிக்குள்  கருஞ்சாரை பாம்பு ஒன்று  பிடிபட்டது. இன்று செவ்வாய்க்கிழமை, 4 அடி நீளமுள்ள மஞ்சள் சாரை பாம்பு ஒன்று பள்ளிக்குள் சுற்றியது.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த தகவலின் பேரில் பள்ளிக்கு விரைந்து சென்ற வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர், அந்த பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்து பாம்புகளை கண்டதால் மாணவர்கள் அச்சமடைந்து அலறினர். இருப்பினும் இந்த பாம்புகள் விஷம் இல்லாதவை என்பதால், ஆசிரியர்களும், பெற்றோர்களும் நிம்மதி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT