வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பிடிபட்ட மஞ்சள் சாரை பாம்பு. 
தமிழ்நாடு

அரசுப் பள்ளிக்கு படையெடுத்த பாம்புகளால் பரபரப்பு!

வாழப்பாடி அருகே அரசு பள்ளிக்கு படையெடுத்த பாம்புகளால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

வாழப்பாடி அருகே அரசு பள்ளிக்கு படையெடுத்த பாம்புகளால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிபாடுகள் ‌அகற்றப்படாததால்,  அப்பகுதியில் பாம்புகள் புகுந்துள்ளன. 

நேற்று திங்கள்கிழமை ‌பள்ளிக்குள்  கருஞ்சாரை பாம்பு ஒன்று  பிடிபட்டது. இன்று செவ்வாய்க்கிழமை, 4 அடி நீளமுள்ள மஞ்சள் சாரை பாம்பு ஒன்று பள்ளிக்குள் சுற்றியது.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த தகவலின் பேரில் பள்ளிக்கு விரைந்து சென்ற வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர், அந்த பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்து பாம்புகளை கண்டதால் மாணவர்கள் அச்சமடைந்து அலறினர். இருப்பினும் இந்த பாம்புகள் விஷம் இல்லாதவை என்பதால், ஆசிரியர்களும், பெற்றோர்களும் நிம்மதி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT