ஆன்லைன் விளையாட்டில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட தாமு 
தமிழ்நாடு

ஆன்லைன் விளையாட்டில் தோல்வி: மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலை

வேலூர் அருகே ஆன்லைன் விளையாட்டில் தோல்வியடைந்த விரக்தியில் 14 வயது மாணவன் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

DIN

வேலூர்: வேலூர் அருகே ஆன்லைன் விளையாட்டில் தோல்வியடைந்த விரக்தியில் 14 வயது மாணவன் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வேலூர் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரரை அடுத்த பெரிய பாலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமு(14). இந்த மாணவன் கைப்பேசி மூலம் ஆன்லைன் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில், வியாழக்கிழமை ஆன்லைன் விளையாட்டில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விரக்தியில் காணப்பட்ட தாமு, வியாழக்கிழமை இரவு வீட்டின் மாடியில் பிளேடால் கழுத்தை அறுத்த தற்கொலை கொண்டார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் கிராமிய போலீசார் உடலை கைப்பற்றி  உடல் கூறாய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT