தமிழ்நாடு

செவிலியர்களுக்கு 4 நாள்களுக்கு மேல் விடுப்பு இல்லை: புதுச்சேரி அரசு அதிரடி!

DIN

புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் நான்கு நாள்களுக்கு மேல் விடுப்பு எடுக்கக்கூடாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், 

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை நிலவுவதால் நான்கு நாள்களுக்கு மேல் செவிலியர்கள் விடுமுறை எடுக்க அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செவிலியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. 

இந்த நிலையில், புதுச்சேரியில் மாதத்தில் 4 நாள்களுக்கு மேல் விடுப்பு எடுக்க அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

4 நாள்களுக்கு மேல் விடுப்பு தேவையெனில், மருத்துவ வாரிய அதிகாரிகள் முன்பு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT