முகப்பு
தமிழ்நாடு

தேமுதிக தொடக்க நாள்: கட்சிக் கொடியேற்றினாா் பிரேமலதா

தேமுதிகவின் 19-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அந்தக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை கட்சி கொடியை ஏற்றி வைத்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
பகிர்:

தேமுதிகவின் 19-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அந்தக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை கட்சி கொடியை ஏற்றி வைத்தாா்.

விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் வாயில் பகுதியில் தேமுதிகவின் கொடியை பிரேமலதா விஜயகாந்த் ஏற்றிவைத்து, தொண்டா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். அதேபோல், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநிலத் துணைச் செயலா் எல்.கே.சுதீஷ் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். மாநிலத் துணைச் செயலா் பாா்த்தசாரதி உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேமுதிகவினா் கட்சி கொடியை ஏற்றி வைத்து, ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →