கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை, புறநகரில் பரவலாக மழை: காலை 10 வரை தொடரும்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், காலை 10 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், காலை 10 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை ஏற்கெனவே வானிலை மையம் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கிண்டி, கோயம்பேடு, அண்ணா நகர், அம்பத்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக தொடர் மழை பெய்து வருகின்றது.

அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT