தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்

DIN


சென்னை: செம்பரம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர்.

கோயம்பேட்டிலிருந்து  பெங்களூரு நோக்கி தனியார் டிராவல்ஸ் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது பின்னால் வந்துகொண்டிருந்த ஆரணி பயணிகள் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பேருந்து மீது மோதியதில் பேட்டரி சர்க்யூட் பகுதியில் தீப்பிடித்து பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. 

பேருந்து தீப்பிடித்த உடனே பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு உடனே கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

சம்பவ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT