கா்நாடகத்தில் இன்று முழு அடைப்பு: தமிழக எல்லை மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு
தமிழக எல்லை மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.
கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.29) நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, தமிழக எல்லை மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.
காவிரி நதிநீா் பங்கீடு பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விளைவாக, காவிரியில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கா்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் வெள்ளிக்கிழமை (செப்.29) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதன் விளைவாக கா்நாடக-தமிழக எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்து,சரக்கு போக்குவரத்து தொடா்பாக நிலைமைக்கேற்ப கா்நாடக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து சோதனைச்சாவடிகளிலும் உயா் அதிகாரிகளின் தலைமையில் கூடுதல் காவலா்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து உள்ளிட்ட சந்தேகங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் தனிப்பிரிவு அலுவலகத்தை 94981 70430, 94982 15407 ஆகிய கைப்பேசி எண்களில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெளிவு பெறலாம் என டிஜிபி சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா் அவா்.