பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படவுள்ளது.
சென்னை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படவுள்ளது.
ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளன்று அதிகளவிலான பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டு வழக்கத்தைவிட அதிக பதிவுகள் நடைபெறும்.
இதையும் படிக்க | திருச்சி: காவிரியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவதால் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக டோக்கன் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.