முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் மொழிப் புரட்சியை உருவாக்காதீர்கள்! மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

எதிர்ப்பின்றி அனைவரும் ஹிந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு எதேச்சாதிகார முயற்சி: மு.க. ஸ்டாலின்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:05 PM
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்ப்பின்றி அனைவரும் ஹிந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு எதேச்சாதிகார முயற்சியாகும். 

மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!

தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், தில்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம்.

ஹிந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை அமித் ஷா உணர வேண்டும்.

1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →