FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நெல்லை, தூத்துக்குடியில் நாளை முதல்வர் நேரில் ஆய்வு!

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்கிறார். 

6 பிப்ரவரி 2024, 6:58 pm IST
பகிர்:

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்கிறார். 

கடந்த இரு தினங்களாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகின்றது. அதி கனமழையானது 4 மாவட்டங்களிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்றும் அதிகனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 

கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். 

Advertisement

Advertisement

தில்லியில் கேஜரிவாலை சந்திக்கச் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், 

நாளை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார். 

வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட தென் மாவட்டங்களில் அதிகளவு கனமழை பெய்துள்ளது. இதனால் பாதிப்பும் அதிகரித்துள்ளது. 

சென்னையில் எவ்வளவு விரைவாக மீட்புப் பணிகள் நடைபெற்றதோ,  அதே அளவுக்கு தென்மாவட்டங்களிலும் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments