முகப்பு
தமிழ்நாடு

நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை(டிச. 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:29 PM
கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை(டிச. 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதால் தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் கனமழை கொட்டித் தீா்த்தது.

தாமிரவருணியில் 50 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால், கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழந்தது. அதில் சிக்கியவா்களை படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்றது.

இன்னும் பல இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பாதால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.