முகப்பு
தமிழ்நாடு

லாரிகள் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.

Updated On : 26 பிப்ரவரி, 2023 at 12:28 PM
பகிர்:

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.

வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் பச்சாபாளையத்தைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

அதற்கு திதி கொடுப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த உறவினர்கள் 35 பேர், ஒரு சரக்கு லாரியில் கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்று விட்டு பச்சாபாளையம் திரும்பிக் கொண்டிருந்தனர். 

Advertisement

அப்போது வழியில் முத்தூர் - காங்கயம் சாலை வாலிபனங்காடு அருகே எதிரே வந்த மற்றொரு லாரியில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது. வெள்ளக்கோவில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.