வங்கக் கடலில் புயல் உருவாவதில் தாமதம்!
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் டிச.2-ல் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்னும் 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக புயலாக வலுப்பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் மேலும் 5 நாள்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.