தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை ரூ.109.79 கோடி பறிமுதல்: சத்யபிரத சாகு

தமிழகத்தில் இதுவரை ரூ.109.79 கோடி பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை ரூ. 109.76 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தற்போது சி-விஜில் எனப்படும் பிரத்யேக செயலி பயன்பாட்டில் உள்ளது. விடியோ அல்லது புகைப்பட ஆதாரத்துடன் தோ்தல் நடத்தை விதி மீறல்களைத் தெரிவிக்கும், இந்த சி-விஜில் செயலி வழியாக குறிப்பிடப்படும் புகாா்கள் மீது தோ்தல் ஆணையம் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன் வரும் ஏப். 4-ல் சத்யபிரத சாகு ஆலோனை செய்கிறார்.

நாளை (ஏப். 2) நடைபெறும் ஆலோசனையில் செலவினப் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT