தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மாட்டேன்: குஷ்பு
பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டேன் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் அறிவுறுத்தலால் தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ள முடியாது என்று நடிகை குஷ்பு ஜேபி நட்டாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
"சில நேரங்களில், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் என்னால் பிரசாரத்தில் ஈடுபட முடியாது.
Advertisement
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி கொள்கையை பின்பற்றி செயல்பட்டு வரும் நான், கனத்த இதயத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளேன்.
எனக்கு ஏற்பட்டுள்ள முதுகு தண்டு பிரச்னை காரணமாக, நேரடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாது. சமூக வலைதளங்களில் தொடர்து பிரசாரம் செய்வேன்."
பாஜக தேசியத் தலைவர் நட்டாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் நடிகை குஷ்பு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.