தமிழ்நாடு

பராமரிப்புப் பணி: திருப்பதி செல்லும் ரயில்கள் பகுதியளவு ரத்து!

DIN

திருப்பதி யார்டில் நடைபெறும் பராமரிப்புப் பணியின் காரணமாக திருப்பதி செல்லும் சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதி யார்டில் நடைபெறும் பராமரிப்புப் பணி காரணமாக வரும் ஏப். 16 முதல் 23 வரை திருப்பதி மற்றும் திருச்சானூர் இடையே 10 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏப். 16 முதல் 23 வரை சென்னை, அரக்கோணம், விழுப்பரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், திருப்பதியில் இருந்து சென்னை, அரக்கோணம், விழுப்பரத்துக்கு செல்லும் ரயில்களும் திருப்பதி மற்றும் திருச்சானூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில், திருப்பதி மற்றும் திருச்சானூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

SCROLL FOR NEXT