தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஏப்.13) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணத்தால், வெள்ளிக்கிழமை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யதது.
இந்த நிலையில், சனிக்கிழமை(ஏப்.13) அடுத்த 3 மணி நேரத்துக்கு மயிலாடுதுறை, நாகப்படடினம், ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.