கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்
கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை, கொளத்தூர், ஐ.சி.எப். பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் ஆகியோருக்கு வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்து சென்ற இடங்களில் எல்லாம் மகளிர் பெருமளவில் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஸ்டாலின், அங்குள்ள விளையாட்டுத் திடலுக்குச் சென்று அங்கு பயிற்சி செய்துகொண்டிருந்த கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள் கூறி அவர்களுக்கு மேலும் வசதிகள் ஏதும் தேவைப்படுகிறதா என்று அக்கறையுடன் கேட்டார்.
Advertisement
Advertisement
அங்கிருந்த கால்பந்து வீரர்களுடன் ஸ்டாலின் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். கொளத்தூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று திமுகவுக்கு வாக்கு சேகரித்தார்.
முதல்வரின் வருகைக்காக அந்தப் பகுதி மக்கள், வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு, தோரணங்கள் கட்டி, ஆர்வத்தோடு திரண்டு நின்று இசை வாத்தியங்களோடு வரவேற்றனர். அந்தப் பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.