முகப்பு
தமிழ்நாடு

நயினார் நாகேந்திரன் வழக்கு- அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 22 ஏப்ரல், 2024 at 6:56 AM
பகிர்:

ரூ. 4 கோடி பணம் சிக்கிய வழக்கில் அமலாக்கத் துறை வரும் 24ஆம் தேதிக்குள் விரிவாக விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏப். 6-ஆம் தேதி தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டபோது திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நாகேந்திரனின் காா் ஓட்டுநா் சதீஷ் மற்றும் உதவியாளா்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணம் தொடா்பாக விளக்கம் அளிக்க நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் தாம்பரம் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா். அதன்படி ஏப்ரல் 22-ஆம் தேதி நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து ரூ.3.98 கோடியும், திமுக மாவட்டச் செயலர் அனுலவத்தில் ரூ.28.51 லட்சமும் பறிமுதல் செய்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை விசாரிக்கக் கோரி சுயேச்சை வேட்பாளர் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது என அமலாக்காத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் விரிவாக விளக்கமளிக்க அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →