8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாடு8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புதுச்சேரியிலும் இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூர் வடகுத்துவில் 13 செ.மீ., சென்னை சோழிங்கநல்லூரில் 12 செ.மீ., கடலூர் நெய்வேலியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.