8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 13 வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணிப்பு.
தமிழ்நாடு8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 13 வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணிப்பு.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை முதல் ஆகஸ்ட் 13 வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.