குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு Din
தமிழ்நாடு

தமிழகத்தின் 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது!

நாடு முழுவதும் 1,037 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு..

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு தமிழக காவல் துறையில் 23 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் விருது வழங்கப்படவுள்ளது.

இந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு 2 முறை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் விருதுகள் வழங்கப்படுகின்றன. போலீஸாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது.

அந்த வகையில், நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை, தீயணைப்புத் துறை, மத்திய துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,037 பேர் குடியரசுத் தலைவரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுகள் தமிழகத்தை சேர்ந்த டிஜிபி வன்னிய பெருமாள் மற்றும் ஏடிஜிபி அபின் தினேஷ் மோடாக் ஆகிய இரண்டு காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும், குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருதுகள், தமிழக காவல் துறையைச் சோ்ந்த 21 பேருக்கும், ஊர்க்காவல் படையை சேர்ந்த 3 வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

விருதுபெறும் அதிகாரிகள்
விருதுபெறும் ஊர்க்காவல் படையினர்

இவர்கள் அனைவருக்கும் தில்லி செங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஎஸ்என்எல் தீபாவளிப் பரிசு! ஒரு ரூபாய்க்கு சிம் - தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள்

மீண்டும் பாரிஸுக்குப் போகலாம்... அனன்யா பாண்டே!

வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி; முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்!

தீபாவளிப் பரிசு... பூஜா ஹெக்டே!

இது என்ன மாயம்... அரிஷ்பா கான்!

SCROLL FOR NEXT