ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

முதல்வரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிப் பிரிவுச் செயலாளர்கள் மாற்றம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

DIN

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிப் பிரிவுச் செயலாளர்கள் மாற்றம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தலைமைச்செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து நா.முருகானந்தம் ஐஏஎஸ் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நேற்று(ஆக. 19) நியமனம் செய்யப்பட்டார். இவர் முதல்வரின் முதல் தனிச் செயலாளராக இருந்தார்.

தொடர்ந்து, முதல்வரின் தனிச் செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, முதல்வரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். அந்த சமயத்தில் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தியவர் .

இரண்டாவது செயலாளராக எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ், மூன்றாவது செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உமா நாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய மூவரும் முறையே முதல்வரின் 2, 3, 4 ஆவது தனிச் செயலாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT