முதல்வரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்!
முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிப் பிரிவுச் செயலாளர்கள் மாற்றம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிப் பிரிவுச் செயலாளர்கள் மாற்றம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தலைமைச்செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து நா.முருகானந்தம் ஐஏஎஸ் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நேற்று(ஆக. 19) நியமனம் செய்யப்பட்டார். இவர் முதல்வரின் முதல் தனிச் செயலாளராக இருந்தார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, முதல்வரின் தனிச் செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, முதல்வரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். அந்த சமயத்தில் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தியவர் .
இரண்டாவது செயலாளராக எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ், மூன்றாவது செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உமா நாத், எம்.எஸ். சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய மூவரும் முறையே முதல்வரின் 2, 3, 4 ஆவது தனிச் செயலாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.