மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு!
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோடி, திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் ஏ.ஏஸ். அமுதா, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி, மாநில கல்வியில் ஆராய்ச்சி பயிற்சி இயக்க துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.