கோப்புப்படம் Din
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

காலை 10 மணிவரை தமிழகத்தின் வானிலை குறித்து...

DIN

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் செப். 2 வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிப்பு வெளியாகி இருந்தது.

இதனிடையே, புதன்கிழமை அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள் புதன் முதல் சனிக்கிழமை (ஆக.28-31) வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதி, அதையொட்டிய குமரிக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ரயில்வே துறைக்கு புத்துயிர்: அஸ்வினி வைஷ்ணவ்

ஜம்மு-காஷ்மீர்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல்

கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: ஒருநபர் ஆணையம், சிறப்பு விசாரணைக் குழு ரத்து

மேற்கு வங்க வெள்ளத்துக்கு காரணம் பூடான்: இழப்பீடு தர மம்தா வலியுறுத்தல்

சட்டப்பேரவை இன்று கூடுகிறது: மறைந்த பிரமுகா்களுக்கு இரங்கல்

SCROLL FOR NEXT