ஃபென்ஜால் புயல் பாதிப்புகள் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுக எம்பி டி.ஆர்.பாலு திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்தது. அதையடுத்து விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டியது.
அதிகனமழை மற்றும் காற்றின் காரணமாக சாலைகள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு புயல் பாதிப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.
அந்த நோட்டீஸில், மழை பாதிப்பை கணக்கிட மத்திய அரசின் குழுவை அனுப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.