அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடதமிழகத்தில் டெல்டா முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டிச. 11, 12 ஆகிய தேதிகளிலும், தென் தமிழகத்தில் டிச. 13, 14 ஆகிய தேதிகளிலும் மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார்.
இதேபோன்று டிச. 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், மற்றொரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், பருவமழை டிசம்பர் 10 முதல் தீவிரமடைவதால் சென்னை முதல் நகை வரை எச்சரிக்கை தேவை என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் குறிப்பிட்டிருந்தார்.