எஸ்.ஏ.பாஷா 
தமிழ்நாடு

கோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா மரணம்!

கோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா உடல் நலக்குறைவால் காலமானார்.

DIN

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார்.

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகி சிறைக்குச் சென்ற பாஷா நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

இந்த நிலையில் தனது இல்லத்தில் திங்கள்கிழமை உயிரிழந்தார். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-உம்மாவை நிறுவியவர் பாஷா. பாஷா பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மாலை 6.20 மணியளவில் மரணமடைந்ததாக அவரது மகன் சித்திக் அலி தெரிவித்துள்ளார்.

பாஷா மற்றும் அல்-உம்மாவைச் சேர்ந்த 16 பேர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பிப்ரவரி 1998 முதல் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜாமீன் பெற்று வெளியேவந்தார்.

கடத்திவரப்பட்ட உயர்ரக கஞ்சா: காட்டிக்கொடுத்த மோப்ப நாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு!

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

SCROLL FOR NEXT