அரசு சொத்தை விலை பேசினேனா? இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்
புதுச்சேரி அரசு சொத்தை விலைக்கு கேட்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார்.
புதுச்சேரி அரசு சொத்தை விலைக்கு கேட்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் புதுச்சேரிக்கு சென்று இருந்தார். அங்கு அவர் சுற்றுலாத் துறை அமைச்சரை சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பில் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக ஒரு செய்தி பரவியது. விக்னேஷ் சிவன் பற்றிய இந்த செய்தி இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுதொடர்பான ஏராளமான மீம்ஸ்களும் உலா வந்தன. இந்த நிலையில் புதுச்சேரி அரசு சொத்தை விலை பேசியதாக வெளியான தகவல் தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், எனது எல்ஐகே படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி கேட்க சென்றேன். மரியாதை நிமித்தமாக முதல்வர், சுற்றுலாத் துறை அமைச்சரவை சந்தித்தேன்.
Advertisement
Advertisement
நடிகா் ராஜ் கபூரின் 100-ஆவது பிறந்தநாள் விழா: பாகிஸ்தானில் கோலாகல கொண்டாட்டம்
எதிர்பாரதவிதமாக உள்ளூர் மேலாளர் ஒருவர் அவருக்காக ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக விசாரித்துக் கொண்டிருந்தார். தற்போது இந்த தகவல் தவறுதலாக என்னுடன் இணைத்து சொல்லப்பட்டு வருகிறது. அரசு சொத்து விவகாரத்தில் வெளியான மீம்ஸ்கள் வேடிக்கையாக இருந்தது. அது எனக்கு உத்வேகமும் அளிக்கிறது. ஆனால் அவையெல்லாம் தேவையற்றது.
அதனால் இந்த தகவலை தெளிவுப்படுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.