பேரவைத் தலைவர் அப்பாவு  DOTCOM
தமிழ்நாடு

பிப்.22 வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

DIN

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

ஆனால், அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையில் உடன்பாடு இல்லை எனத் தெரிவித்த ஆளுநர், 2 நிமிடங்களில் உரையை முடித்து இருக்கையில் அமர்ந்தார்.

இந்த நிலையில், பிப்ரவரி 22-ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மேலும், பிப். 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் ஆளுநர் உரை மீது விவாதமும், 15-ஆம் தேதி பதிலுரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப். 19-ஆம் தேதி 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும், 20-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT