திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளிவரும்: இபிஎஸ்
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளிவரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுதிமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளிவரும்: இபிஎஸ்
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளிவரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளிவரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடுகள் செய்து வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு திமுக ஏற்கெனவே விருப்ப மனு விநியோகித்து வரும் நிலையில், அதிமுக இன்று காலை முதல் விருப்ப மனு விநியோகித்து வருகின்றது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசியது:
“திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நிறைவு செய்வதற்குள் கூட்டணிக் கட்சிகள் வெளியே வரும் பொறுத்திருந்து பாருங்கள். உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு அளித்துள்ளது. இனி யாரும் முடக்க முடியாது.
அதிமுக பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்காது. வாக்களித்து வெற்றி பெற வைக்கும் மக்களின் தேவையை நாங்கள் நிர்ணயிக்க வேண்டும். ஆனால், கூட்டணி என்று வரும்போது கூட்டணி தர்மம் வருகிறது. தேசிய அளவில் ஒரு முடிவை எடுக்கும் போது மாநிலத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால், அதிமுக சுயமாக முடிவெடுத்து செயல்படுவதற்காக தேசிய கட்சியின் கூட்டணியில் இடம்பெறவில்லை.” எனத் தெரிவித்தார்.