கோப்புப்படம்
கோப்புப்படம் 
தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு: மா. சுப்பிரமணியம்

DIN

தமிழகத்திலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட குடிமல்லூர் பகுதியில், தனியார் பங்களிப்பு மற்றும் நமக்கும் நாமே திட்டத்தின் கீழ் 6.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 19 புதிய துணை சுகாதார நிலையங்களின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு கட்டடங்களை திறந்து வைத்தனர்.

அப்போது பொதுமக்களிடையே பேசிய அமைச்சர் மா.சுபிரமணியம், தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாயப்பட்டறைகள் அதிகம் நிறைந்த மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு என்பது அதிக அளவில் காணப்படுவதாகவும், இதனை கண்டறிய ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புற்று நோய் கண்டறியும் சோதனை அரசு சார்பில் நடத்தி வருவதாக தெரிவித்தார்.

குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக 9566 நபர்களுக்கு மேற்கொண்ட புற்றுநோய் பரிசோதனையில், 222 பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், 290 பேருக்கு கருப்பை புற்றுநோயும், 29 நபர்களுக்கு வாய் புற்றுநோயும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளையும், சிகிச்சையை அளித்து உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

அதே போல, தமிழகத்திலேயே ராணிப்பேட்டையில் தான் புற்றுநோய் பாதிப்பு விகிதம் என்பது அதிகமாக உள்ளது என்பது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT