கோப்புப் படம் 
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டுக்கு 25 கம்பெனி ஆயுதப் படை!

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாதுகாப்பு

DIN

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 25 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வரும் மார்ச் 1ஆம் தேதி 15 கம்பெனி மத்திய ஆயுதப் பாதுகாப்பு படையினரும், மார்ச் 7ஆம் தேதி 10 கம்பெனி ஆயுதப் பாதுகாப்புப் படையினரும் தமிழ்நாட்டிற்கு வருகைத்தரவுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக 25 கம்பெனி மத்திய ஆயுதப் படையினரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளுக்காகவும் மத்திய உள் துறை அமைச்சகம் நியமித்துள்ளது. அவற்றில் 15 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் மார்ச் 1ஆம் தேதியும், 10 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் மார்ச் 7ஆம் தேதியும் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 05-10-2025

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

தன்னை வியத்தலினால் கேடு

போரை நிறுத்திய புலவர்கள்!

நீர்க்குமிழிபோல வாழ்க்கை

SCROLL FOR NEXT