கோப்புப்படம் 
தமிழ்நாடு

இனி தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம்: தமிழக அரசு

இனி தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

DIN

ஓட்டுநர் உரிமத்தை விண்ணப்பத்தாரர்கள் இன்றுமுதல் நேரில் வாங்க முடியாது என்றும், தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், விரைவு அஞ்சல்மூலம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமத்தை நேரடியாக வழங்கப்பட மாட்டாது என்றும், தொலைபேசி எண், முகவரி தவறாக இருந்தால் ஓட்டுநர் உரிமம் மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு திரும்ப வந்துவிடும், பின்னர் சரியான முகவரியுடைய தபால் உறையை விண்ணப்பத்தாரர்கள் தந்தால் பின்னர் ஓட்டுநர் உரிமம் தபாலில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வரும் மக்கள் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT