தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்: 15 கம்பெனி துணை ராணுவத்தினர் நாளை தமிழகம் வருகை!

DIN

சென்னை தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தலைமையில் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல்கட்டமாக 15 கம்பெணி துணை ராணுவப் படையினர் நாளை(மார்ச். 1) தமிழ்நாடு வர உள்ளனர்.

மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் மார்ச் 7-ஆம் தேதி வர உள்ளனர். ஒரு கம்பெனிக்கு 90 துணை ராணுவப் படையினர் இடம்பெற்றிருப்பார்கள்.

இந்த 25 கம்பெனி துணை ராணுவ படையினர் எந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக காவல்துறையினருடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

தேர்தல் தேதி மற்றும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, யார் எந்தப் பகுதியில் பணியில் ஈடுபடுவார்கள் என்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும்" எனக் கூறினார்.

200 கம்பெனிகள் கேட்டிருந்த நிலையில் 25 கம்பெனிகளை முதல்கட்டமாக அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT