முகப்பு
தமிழ்நாடு

மழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 36 கன அடியாக இருந்த நீர்வரத்து தொடர் மழை காரணமாக இன்று 497 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:22 PM
செம்பரம்பாக்கம் ஏரி
பகிர்:

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 36 கன அடியாக இருந்த நீர்வரத்து தொடர் மழை காரணமாக இன்று 497 கன அடியாக அதிகரித்துள்ளது.

3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், தற்போது நீர் இருப்பு 3132 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரியில் இருந்து குடிநீருக்காக 108 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.05 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

தொடர்ந்து ஏரியை கண்காணித்து வரும் நிலையில் நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

முழு கட்டுரையைப் படிக்க →